நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகரில் சிறுமியிடம் கொலுசை திருட முயன்றவர் கைது

விருதுநகரில் பள்ளிக்கூடம் முன்பு சிறுமியிடம் கொலுசை திருட முயன்றவரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:11 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் பள்ளிக்கூடம் முன்பு சிறுமியிடம் கொலுசை திருட முயன்றவரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் பர்மா காலனியில் கொடிமரம் தெருவைச் சேர்ந்தவர் வனராஜ்(30). இவரது மகள் அதே பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாராம். இந்நிலையில், காலையில் பள்ளிக்கூடத்திற்கு முன்பு இறக்கிவிட்டாராம். பின்னர் திரும்பி செல்வதற்கு முன் மீண்டும் மகளை பார்ப்பதற்காக வரும் போது, யாரோ ஒருவர் கால் கொலுசை திருட முயற்சி செய்து கொண்டிருந்தாராம்.
இதையறிந்து விரைவாக சென்று அவரை பிடித்து மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாரம். அதையடுத்து, வனராஜ் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில் மாந்தோப்பு அருகே பழைய வையம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ்(56) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நாகராஜையும் கைது செய்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.