விருதுநகர் அருகே மூதாட்டியிடம் 2 சவரன் நகை பறிப்பு
விருதுநகர் அருகே நடந்து சென்ற மூதாட்டியை வழிமறித்து கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து


விருதுநகர் அருகே நடந்து சென்ற மூதாட்டியை வழிமறித்து கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே தாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவசியின் மனைவி ராமலட்சுமி(65). இவர் சனிக்கிழமை காலையில் தனியார் தொழிற்பயிற்சி நிலையம் எதிரே 4 வழிச்சாலையின் அணுகுசாலையில் தனது கிராமம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, 30 வயது மதிப்புடைய 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினார்களாம்.
இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தில் மூதாட்டி ராமலட்சுமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை வழிமறித்து 2 சவரன் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...