நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் அருகே திருமணமான பெண் மாயம்: தந்தை புகார்

விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(60). இவரது மகள் நாகஜோதி(22), ஆமத்தூர் அருகே மூளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவசியப்பன் என்பவருக்கும் திருமணமாகி

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:11 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே திருமணமான பெண்ணை காணவில்லையென தந்தை வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார்.

விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(60). இவரது மகள் நாகஜோதி(22), ஆமத்தூர் அருகே மூளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவசியப்பன் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகளான நிலையில் கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கன்னிசேரிபுதூர் கிராமத்தி்ல் நடைபெறும் திருவிழாவிற்காக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மகள் நாகஜோதியை அழைத்து வந்தாராம்.இதையடுத்து, சனிக்கிழமை இரவு வெளியே சென்று வருவதாக கூறி நாகஜோதி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருப்பதை கண்டு சுப்புராஜ் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உறவினர் மற்றும் தோழி வீடுகளிலும் தேடியதில் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லையாம்.

இது தொடர்பாக சுப்புராஜ் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து காணமல் போன நாகஜோதி குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.