விருதுநகர் மின்கோட்டத்தைச் சேர்ந்த சூலக்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்(சனி்க்கிழமை) 28-ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 5 மணி வரையில் மின் தடை செய்யப்பட இருப்பதாக செயற்பொறியாளர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சூலக்கரை துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கிராமங்களான சூலக்கரை, ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவலர் குடியிருப்பு வளாகம், அழகாபுரி, மீசலூர், செவலூர், தாதம்பட்டி, கூரைக்குண்டு, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நாளில் மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.