நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கழிவு நீரை அகற்றும் பணிக்கு மகளிர் குழுக்கள் மூலம் ஆள்கள் எடுக்கப்படும்: நகராட்சி தலைவர் மா.சாந்தி

விருதுநகர் நகராட்சியில் தெருக்களில் தேங்கும் கழிவு நீரை அகற்றுவதற்கு மகளிர் சுய குழுக்களில் இருந்து ஆள்கள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக நகராட்சி தலைவர் தெரிவித்தார். 

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:50 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் நகராட்சியில் தெருக்களில் தேங்கும் கழிவு நீரை அகற்றுவதற்கு மகளிர் சுய குழுக்களில் இருந்து ஆள்கள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக நகராட்சி தலைவர் தெரிவித்தார். 

காமராஜர் கூட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மா.சாந்தி தலைமை வகித்தார். ஆணையாளர் (பொறுப்பு) மோகன், நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அலுவலர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:

சுகுமார்ராஜன்: நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதை அகற்ற நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 109 பேர் மட்டுமே உள்ள நிலையில், போதுமான துப்புரவு பணியாளர்கள் நியமிக்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நாகேந்திரன்: நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு நகராட்சி மூலம் இலவச குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ளனர். இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கே.ஜெயக்குமார்: தெப்பம் மேற்கு பஜாரில் மழை வாறுகால் அமைக்கப்படாமல் பேவர் கற்கள் பதிக்கும் பணி மேற்கொள்கின்றனர். இதனால் மழைக்காலங்களில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது. மேலும், நகராட்சியில் ரூ.70 லட்சம் வரையில் தொழில் வரி நிலுவையில் உள்ளது. அதை வசூல் செய்யவும் வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து மா.சாந்தி பேசுகையில், துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு பலமுறை கடிதம் அனுப்பியும், ஆள் எடுப்பது தொடர்பாக எந்த அனுமதி கடிதம் வரவில்லை. அதனால் கழிவு நீர் வாய்க்காலில் தேங்கியுள்ள மணலை அகற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களில் இருந்து ஆள்கள்  எடுக்கப்படும்.

நகர்ப்புற குடிமை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்க கணக்கு எடுக்கப்பட்டுள்ளதால் விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தெப்பம் பஜார் சாலையில் பேவர் கற்கள் பதிக்கும் சாலையில் இருபுறமும் வாறுகால் அமைப்பதற்கான தொகை நகராட்சி மூலம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் நெடுஞ்சாலைத்துறையை கழிவு நீர் வாய்க்கால் அமைக்க அறிவுறுத்தப்படும். தற்போது. தொழில் வரி செலுத்தவோராக குறிப்பிடும் நபர்கள் அந்த இடங்களில் இல்லை. அதற்கான விவரங்கள் சேகரிக்கப்பட்டு நிலுவையில் தொகையை வசூலிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தலைவர் தெரிவித்தார்.

மேலும், இக்கூட்டத்தில் நகராட்சி வரவு, செலவு மற்றும் வளர்ச்சி பணிகள் குறி்தத தீர்மானங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இதில், நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.