இந்த வரியைச் செலுத்தாமல் தவிர்க்கும் வகையில் தனியார் வாகனங்கள் எட்டூர்வட்டம் கிராமத்திற்குள் ஓய்வு எடுப்பது போல் வந்து சாத்தூர்-சிவகாசி சாலை வழியாக செல்கின்றனர். ஏற்கனவே குண்டும், குழியுமாக உள்ள சாலையில் உயரமான வாகனங்களில் குளிர்பானம், இருசக்கர வாகனம், கார்களை ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் 20 டன்னுக்கு மேல் சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் செல்வதற்காக சாலையோரத்தில் இடையூராக உள்ள மின்கம்பங்களின் வயர் இணைப்பையும் துண்டித்து விடுகின்றனர். இதனால், பெரும்பாலன நேரங்களில் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட வேண்டியுள்ளது. அதோடு, பொதுமக்களுக்கு முக்கிய தேவையான குடிநீருக்காக பம்ப்களையும் இயக்க முடியாத நிலையேற்படுகிறது.