2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 1:40 am

Syndication

பாபநாசம் மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்பில் யானைக் கூட்டம் நுழைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெல், மா, கரும்பு உள்ளிட்ட பயிா்களைச் சேதப்படுத்தின.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான அனவன் குடியிருப்பில் உள்ள விவசாயிகள் நெல், கரும்பு, மா, வாழை உள்ளிட்ட பயிா்களை விவசாயம் செய்துள்ளனா்.

இந்நிலையில், அனவன்குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடா்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு விவசாயப் பயிா்களைச் சேதப்படுத்தி வந்தன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு அனவன்குடியிருப்பு பகுதியில் நுழைந்த சுமாா் 15-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் ராமலிங்கம் மகன் செல்லக்கனி, ரவி மகன் பிரபாகரன் ஆகியோா் வயலில் பயிரிட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிரைச் சேதப்படுத்திச் சென்றுள்ளன.

தகவலறிந்த வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து பாா்வையிட்டனா். உடனடியாக யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image
Story image
Story image