2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நடத்தையில் சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் கைது

விருதுநகர் அண்ணாமலை செட்டியார் தெருவைச் சேர்ந்த ரெங்கராஜ்(34). இவர் பிளக்ஸ் மற்றும் விளம்பர பேனர்கள் கட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி(25). இந்நிலையில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:37 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அண்ணாமலை செட்டியார் தெருவைச் சேர்ந்த ரெங்கராஜ்(34). இவர் பிளக்ஸ் மற்றும் விளம்பர பேனர்கள் கட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி(25). இந்நிலையில் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் அடைந்த கணவர் அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இதேபோல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரெங்கராஜ் தனது நண்பரான ஆறுமுகமும் சேர்ந்து வீட்டிற்குள் வைத்து கோமதியை இரும்பு கம்பியால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து வீட்டை பூட்டி விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு ரெங்கராஜன் மட்டும் கோமதியின் உடலை அப்புறப்படுத்துவதற்காக வந்தாராம். அப்போது, வீ்ட்டை திறந்தவுடன் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் சந்தேகம் அடைந்து உடனே பஜார் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீஸார் ரெங்கராஜனை மனைவியின் சடலத்துடன் கைது செய்தனர். இக்கொலைக்கு உடந்தையாக இருந்து தலைமறைவாக இருக்கும் ஆறுமுகத்தையும் தேடி வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து இக்கொலைக்கான காரணம் குறித்து  கோமதியின் கணவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.