2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மாவட்ட நூலகத்துறை சார்பில் குழந்தைகளுக்கு விலையில்லா கற்றல் உபகரண பெட்டிகள் வழங்கல்

விருதுநகர் மாவட்ட நூலக வளாகத்தில் குழந்தைகளுக்கான நவீன நூலக பிரிவில் நடந்த நிகழ்ச்சிக்கு தனியார் புத்தக நிறுவனத்தின் மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:09 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட நூலகத்துறை சார்பில் உறுப்பினர்களாக சேரும் குழந்தைகளுக்கு விலையில்லா கற்றல் உபகரணப்பெட்டி வழங்கும் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட நூலக வளாகத்தில் குழந்தைகளுக்கான நவீன நூலக பிரிவில் நடந்த நிகழ்ச்சிக்கு தனியார் புத்தக நிறுவனத்தின் மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர்(பொறுப்பு) சே.ஜெகதீசன் வரவேற்புரை வழங்கினார். உள்ளாட்சி தணிக்கை துறையின் உதவி இயக்குநர் கே.கருப்பையா, பேராசிரியர் க.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் பங்கேற்று பேசுகையில், குழந்தைகளிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நவீன குழந்தைகள் நூலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனால், இந்நூலகத்தை குழநதைகள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வாசிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அதையடுத்து, இந்நூலகத்தில் முதலில் உறுப்பினர்களாக சேர்ந்த 200 பேருக்கு ரூ.200 மதிப்பிலான விலையில்லா கற்றல் உபகரணப்பெட்டிகளையும் அவர் வழங்கினார். இதற்கான மாவட்ட மைய நூலகர் ராஜேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.