விருதுநகர் மாவட்ட நூலக வளாகத்தில் குழந்தைகளுக்கான நவீன நூலக பிரிவில் நடந்த நிகழ்ச்சிக்கு தனியார் புத்தக நிறுவனத்தின் மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர்(பொறுப்பு) சே.ஜெகதீசன் வரவேற்புரை வழங்கினார். உள்ளாட்சி தணிக்கை துறையின் உதவி இயக்குநர் கே.கருப்பையா, பேராசிரியர் க.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் பங்கேற்று பேசுகையில், குழந்தைகளிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நவீன குழந்தைகள் நூலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனால், இந்நூலகத்தை குழநதைகள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வாசிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றார்.