இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மணியம்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இக்கிராம ஊராட்சியில் ஊராம்பட்டி, பர்மா காலனி, சின்னப்பொட்டல்பட்டி, அம்மாபட்டி, நாகேஸ்வரி காலனி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பெரிய ஊராட்சியாகும். அதிலும், மணியம்பட்டியில் மேல்நிலைத் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் குடிநீரை மற்ற கிராமங்களில் குடிநீர் தொட்டிகளில் ஏற்றி வைத்து விநியோகம் செய்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் மணியம்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை இருக்கிறது.