சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் அருகே குடிநீர் வழங்காமல் இருப்பதை கண்டித்து  ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

சிவகாசி அருகே மணியம்பட்டி கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்வதை அக்கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து வருவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 3:56 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே குடிநீர் வழங்காமல் இருக்கும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம பொதுமகக்ள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

சிவகாசி அருகே மணியம்பட்டி கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்வதை அக்கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து வருவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த சூலக்கரை போலீஸார் பொதுமக்களை தடுத்து நிறுத்தினார்கள். அதன் பின்னர் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மணியம்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இக்கிராம ஊராட்சியில் ஊராம்பட்டி, பர்மா காலனி, சின்னப்பொட்டல்பட்டி, அம்மாபட்டி, நாகேஸ்வரி காலனி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பெரிய ஊராட்சியாகும். அதிலும், மணியம்பட்டியில் மேல்நிலைத் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் குடிநீரை மற்ற கிராமங்களில் குடிநீர் தொட்டிகளில் ஏற்றி வைத்து விநியோகம் செய்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் மணியம்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை இருக்கிறது.

இந்த மேல்நிலைத் தொட்டியின் மோட்டார் ஆபரேட்டராக பட்டாசு ஆலை உரிமையாளரை நியமனம் செய்துள்ளனர். நேரத்திற்கு குடிநீர் மேல்நிலை தொட்டியில் மோட்டார் மூலம் நீ்ர் நிரப்பாமல் பட்டாசு ஆலை வேலையை மட்டும் செய்து வருகிறார். இதுபோன்ற காரணங்களால் 2 கி.மீ தூரத்தில் உள்ள பம்ப்செட் தோட்டத்திற்குச் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய சூழ்நிலையிருக்கிறது. எனவே நாள்தோறும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மனு மீது ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.