சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகரில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சிபிஎம், சிபிஐ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.வெங்கட்டராமன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.

News image
Updated On :5 ஜனவரி 2024, 3:56 am

எஸ். பாண்டியன்

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சிபிஎம்-சிபிஐ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.வெங்கட்டராமன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பொன்னுப்பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் சேகர், சிபிஐயின் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வினால் அனைத்து பொருள்களின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கல்வி, மருத்துவம், விவசாயம் மற்றும் 10 வேலை திட்டங்களுக்கு மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஒற்றுமைக்கு எதிராக மதவெறி நடவடிக்கைகளை வளர்த்து வருவது, கடும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வறட்சி நிவாரண பணிகளை தொடங்காமல் இருப்பது, தொழிலாளர் விரோத போக்கு, கல்வி தனியார்மயம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத போக்குகளை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், வேலுச்சாமி, கணேசன், லட்சுமி, விஜயமுருகன், சிபிஐ சார்பில் சீனிவாசன், ரவி ஆகியோர் மத்திய, மாநில அரசுகளின் விரோதப் போக்குகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இப்போராட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிபிஎம், சிபிஐயைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.