சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் மானபங்கம்: காதலன் கைது

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மேலேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாவின் மகள் கல்பனாதேவி(20). அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் முருகன்(30). இவர் கேபிள் டிவி

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:25 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை மானபங்கம் செய்துவிட்ட பின் மறுத்த காதலனை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மேலேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாவின் மகள் கல்பனாதேவி(20). அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் முருகன்(30). இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை மானபங்கம் செய்ததாகவும்  கூறப்படுகிறது.

இந்நிலையில் முருகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள் செய்து வந்தார்களாம். இது குறித்து கல்பனா தேவிக்கு தெரிய வந்ததை தொடர்ந்து மனவேதனை அடைந்து, முருகனிடம் நேரில் சென்று உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட நிலையில் மறுத்தாராம்.

இது தொடர்பாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் கல்பனாதேவி புகார் செய்தார். அதன் அடிப்படையில் முருகன் மீது போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.