இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு: ஜெயக்குமார்: நகராட்சியில் உள்ள தேசபந்து மைதானம் நெடுஞ்சாலை பராமரிப்பில் உள்ள இடம் எனக்கருதி நிறைய பேர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அதனால், நகராட்சி குழுவின் ஒப்புதல் இல்லாமல் நெடுஞ்சாலை பராமரிப்பில் ஒப்படைக்க கூடாது. அதற்கு பதிலாக ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைவரும் பயன்படும் வகையிலும், நகராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் கலையரங்கம் அமைக்க வேண்டும் என்றார்.
பாட்சா ஆறுமுகம்: மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பின் படி ராமமூர்த்தி சாலையில் அப்பகுதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்டு மேம்பாலம் அல்லது சுரங்க வழிப்பாதை மேற்கொள்ள ஆறு வாராத்திற்குள் முடிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ராமமூர்த்தி சாலையை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கும் வகையில் தீர்மானம் வேண்டும் என குறிப்பிட்டுள்ளன. அதற்கு முன்னதாக அக்குறிப்பிட்ட இடத்தில் என்ன பாலம் அமைய இருக்கிறது என்பது குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு எதுவும் கேட்கவில்லை. அதனால் மேம்பாலம் என்பதை நீக்கிவிட்டு, பாலம் அமைக்க தீர்மானம் என குறிப்பிட வேண்டும் என்றார்.
நாகேந்திரன்: மாத்தநாயக்கன்பட்டி சாலையில் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்கு ஒப்பந்தப்பணிகள் விட்டு இதுவரையில் பணியை தொடங்கவில்லை. அதனால் விரைவில் தொடங்க வேண்டும் என்றார்.
கஜேந்திரன்: நகராடசியில் பெயர் மாற்ற சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ் உள்ளி்ட்டவைகள் வழங்குவதற்கான மனுக் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. இனிமேல், மனுவை பெற்றுக் கொண்டவுடன் ரசீது வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு தலைவர் மா.சாந்தி பதில் அளித்து பேசுகையில், நகராட்சி அனுமதியில்லாமல் நெடுஞ்சாலைத்துறையிடம் தேசபந்து மைதானம் ஒப்படைக்கப்படாது.