விருதுநகர் அருகே வெள்ளூர் கிராமம் உள்ளது. இங்கு பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் நடமாடும் மத்திய பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிப்பதற்காக பலர் வந்து செல்கின்றனர். அதிலும் இரவு நேரங்களில் மதுக்குடித்து விட்டு தகாத வார்த்தைகள் பேசியும், பெண்களை கேலி கிண்டலும் செய்து வருகின்றனர். இதனால் நாள்தோறும் தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது. மேலும், சாலையோரங்களிலும், கிராமத்திற்குள் பொதுமக்கள் நடமாடும் பகுதியிலும் மதுப்புட்டிகளை வீசுவதோடு, உடைத்து விட்டுச் செல்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் பெண்கள், மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகள் நடமாடும் போது காலில் குத்தி காயம் ஏற்படுகிறது.