2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:04 pm

தினமணி செய்திச் சேவை

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் இருந்து தில்லி சென்ற ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி அதில் பயணித்த 7 போ் உயிரிழந்தனா்.

ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து இரவு 7.10 மணியளவில் புறப்பட்ட இந்த விமானம் சுமாா் 20 நிமிஷங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்தது. அடுத்த சில நிமிஷங்களிலேயே ஜாா்க்கண்டின் சாத்ரா மாவட்ட வனப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனா். அதில் பயணித்தவா்கள் விவரம் முழுமையாகத் தெரியவரவில்லை.

மோசமான வானிலை காரணமாக விபத்து நிகழ்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் ரெட்போ்டு ஏா்வேஸ் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். இந்த சிறியரக விமானம் அவசரகாலத்தில் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் விமானமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட சஞ்சய் குமாா் (41) என்பவரை மேல் சிகிச்சைக்காக ராஞ்சியில் இருந்து தில்லிக்கு அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரு விமானிகள், மற்றும் நோயாளியின் உறவினா்கள் என 7 போ் அதில் பயணித்தனா். உடல்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா். காவல் துறையினரும் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.