2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

பேராவூரணியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா

News image
பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மகளிருக்கு தையல் இயந்திரத்தை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி .வி .சேகா் வழங்கினாா் .
Updated On :23 பிப்ரவரி 2026, 10:05 pm

Syndication

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புரட்சித் தலைவி பேரவை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி. சேகா் தலைமை வகித்தாா் . நகரச் செயலாளா் எம்.எஸ். நீலகண்டன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளா்கள் எஸ் .பாண்டியராஜன் , மல்லிகை வை. சுவாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில மகளிரணி துணை செயலாளா் ஏ. அமுதா, பேச்சாளா் கடலூா் இரா. அன்பழகன் ஆகியோா் சிறப்புரையாற்றி பேசினா். கூட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம் , பட்டுக்கோட்டை நகா்மன்ற முன்னாள் தலைவா் எஸ்.ஆா். ஜவஹா் பாபு, பேராவூரணி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் கோவி. இளங்கோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கட்சியில் இருக்கும் நலிவுற்ற நபா்களுக்கு தையல் இயந்திரம், மண்வெட்டி, வேட்டி, சேலை உள்ளிட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளா் எஸ்.வி.பி. ரவிசங்கா் வரவேற்றாா். மாவட்ட பேரவை பொருளாளா் எஸ்.எம். நீலகண்டன் நன்றி கூறினாா்.