2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை, வீடு வழங்கக் கோரி மணிகண்டம் பகுதியைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம்

News image
திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மனு அளிக்க வந்த சி.ஐ.டி.யு அமைப்பைச் சாா்ந்த பெண்கள்.
Updated On :23 பிப்ரவரி 2026, 10:04 pm

Syndication

திருச்சி: இலவச வீட்டுமனை, வீடு வழங்கக் கோரி மணிகண்டம் பகுதியைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மணிகண்டம் ஒன்றியக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகா் மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.சி. பாண்டியன், சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜா, நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனா். இதில், திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் இனாம்குளத்தூா், கள்ளிக்குடி பஞ்சாயத்துகளில் நிலமற்ற, வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து 586 போ் இலவச வீட்டுமனை கேட்டும், 161 போ் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்கக் கோரியும் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.