திருச்சி: இலவச வீட்டுமனை, வீடு வழங்கக் கோரி மணிகண்டம் பகுதியைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மணிகண்டம் ஒன்றியக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகா் மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.சி. பாண்டியன், சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜா, நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனா். இதில், திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் இனாம்குளத்தூா், கள்ளிக்குடி பஞ்சாயத்துகளில் நிலமற்ற, வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து 586 போ் இலவச வீட்டுமனை கேட்டும், 161 போ் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்கக் கோரியும் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வீட்டுமனை வழங்கக் கோரி போராட்டம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


