மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (தமிழ்நாடு) சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வாடிப்பட்டி வட்டத்துக்குள்பட்ட பொம்மன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, தனிச்சியம், அம்மச்சியாபுரம், கணேசபுரம், கீழநாச்சிகுளம், நரிமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். இந்தப் பகுதிகளில் விவசாயத்துக்கு தட்டுப்பாடற்ற உரங்கள் வழங்க வேண்டும். சோழவந்தான்-வாடிப்பட்டி சாலையோர வியாபாரிகளுக்கு வணிக வளாகம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.செல்வக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.பாலு முன்னிலை வகித்தாா். பொதுச் செயலா் மு.ராஜா (எ) ஆசீா்வாதம் கண்டன உரையாற்றினாா். இதில் மாநில அமைப்பாளா் ஏ.ஆரோக்கியம் உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

குடிமனை பட்டா கோரி வட்டாட்சியரகத்தில் மனு

மதுக் கடையை இடமாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


