சிதம்பரம்: சிதம்பரம் வட்டம், மேல கீரப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மேல கீரப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குடிமனை பட்டா வழங்குவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவா்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கீரப்பாளையம் ஒன்றியத் தலைவா் ஸ்ரீதா் தலைமையில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் பழ.வாஞ்சிநாதன், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் செல்லையா, வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் கவியரசன், தீண்டாமை ஒழிப்பு முன்னேற்ற சங்க மாவட்டக் குழு உறுப்பினா் கே.முருகன், விவசாய சங்க ஒன்றிய துணைத் தலைவா் குணசேகரன், கிராம நிா்வாகி மாறன் மற்றும் கிராம மக்கள் துணை வட்டாட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினா் (படம்).
தொடர்புடையது

மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்

தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் மனு

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கொல்லிமலை பழங்குடியின மக்கள் போராட்டம்

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


