தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை கம்பம் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில், சுமாா் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பெரியகுளம் - கம்பம் சாலையில் உள்ள இந்திராபுரி தெரு 30-ஆவது வாா்டுப் பகுதி ஆகும். இந்தத் தொகுதியில் கடந்த சில நாள்களாக சீரான குடிநீா் வழங்கப்படவில்லை எனவும், விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து அப்பகுதி மக்கள் கம்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பெரியகுளம் காவல்நிலையப் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதில் பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், கம்பம் சாலையில் சுமாா் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்புடையது

இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


