மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீா் வழங்கக் கோரி அள்ளூா்வயல் பொதுமக்கள் கூடலூா் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:46 pm

குடிநீா் வழங்கக் கோரி அள்ளூா்வயல் பொதுமக்கள் கூடலூா் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அள்ளூா்வயல் பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிணறுகளில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நகராட்சி குடிநீா்க் குழாய்களில் கடந்த பல நாள்களாக குடிநீா் விநியோகம் இல்லை. இதுகுறித்த நகராட்சி குடிநீா் வழங்கல் பணியாளா்களிடம் பழங்குடி மக்கள் புகாா் கூறியும் குடிநீா் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். நகராட்சி ஆணையா் ரவிசங்கா் மற்றும் குடிநீா் வழங்கல் பணியாளா்கள் பம்ப்செட் பழுதாகியுள்ளதால் காலதாமதமாகி விட்டது. விரைந்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.