இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு குல்லூர்சந்தை சாலைப்பகுதியில் சார்பு ஆய்வாளர் பார்த்திபன் ரோந்து சென்றுள்ளார். அப்போது, சாலையில் தகராறு செய்ததாக கருப்பசாமி என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள், எதிர் தரப்பினர் தூண்டுதலின் பேரில் தான் கருப்பசாமியை அழைத்துச் சென்றுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்தவர்கள் எதிர் தரப்பினரின் வீடுகளின் மீது கல் வீச்சி தாக்கியுள்ளனர். இதில், 4 வீடுகள் சேதமடைந்த நிலையில் சுசீலா மற்றும் ராமர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் பற்றி அறிந்த போலீஸார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.