அவ்வகையில், ராஜபாளையம்-25, ஸ்ரீவில்லிபுத்தூர்-12, சாத்தூர்-15, சிவகாசி-38, விருதுநகர்-15, அருப்புக்கோட்டை-36, திருச்சுழி-4 என மொத்தம் 147 வாக்குச் சாவடி மையங்களில் சாய்வு தள வசதிகள் ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. இம்மைங்களில் குறிப்பிட்ட நாள்களுக்குள் சாய்வுதள பாதை வசதியை ஏற்படுத்துவதற்கு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு வாக்குப் பதிவு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் வாக்காளர்கள் ஆகியோருக்கான குடிநீர், சுகாதார வளாகம் மின்சாரம் ஆகிய வசதி உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி, அதற்கேற்ப உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என அலுவலர்களை ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.