அதேபோல், காங்கிரஸ் 53 வருடங்களாக ஆட்சி செய்த பாரம்பரிய கட்சி ஆகும். பொதுமக்கள் பயனடையும் வகையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெறுவதற்கு கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு சாதனை திட்டங்களை காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ஒவ்வொருவரும் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் கேளுங்கள். இதேபோல், தமிழக அரசு ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்ய துணை நிற்பது நியாயம்தானா என எடுத்துக் கூறுங்கள். ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்திற்கும் உள்பட்ட பகுதிகளில் கட்சியினர்களை சந்தித்து விளக்கமாக எடுத்துரைத்து வாக்களிக்க செய்ய வேண்டும் என மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேட்டுக் கொண்டார்.