நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.81 ஆயிரம் முறைகேடு: அலுவலர்கள் மீது புகார்

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கச்சேரி சாலையில் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில் மேலாளராக ரமேஷ், காசாளராக ரத்தினக்குமாரும் பணியாற்றிவருகிறார்கள்.இவர்கள் பணியாற்றி வரும்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:36 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.81 ஆயிரம் முறைகேடு செய்ததாக மேலாளர் மற்றும் காசாளர் ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கச்சேரி சாலையில் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில் மேலாளராக ரமேஷ், காசாளராக ரத்தினக்குமாரும் பணியாற்றிவருகிறார்கள்.இவர்கள் பணியாற்றி வரும் பிரிவில் கடந்த 2012-ல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வங்கி கணக்குகளை தீவிரமாக அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, ரூ.81 ஆயிரம் முறைகேட்டில் ஈடுபட்டு, தங்களின் கணக்கிற்கு மாற்றியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இது தொடர்பாக மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர் மல்லீஸ்வரி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் இருவர் மீதும் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.