விருதுநகர் மாவட்டம், கூமாபட்டி அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்குமார்(27). இவர் எம்.பி.ஏ பட்டம் பெற்று வேலையில்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், விருதுநகர் லட்சுமி காலனியைச் சேர்ந்த கோவிந்தன்(53). இவர் விருதுநகர் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனக்கு தெரிந்தவர் மூலம் கோவிந்தனை வேலைவாய்ப்புக்காக அணுகியுள்ளார். அப்போது ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினாராம். இதை உண்மையென நம்பிய மகேஸ்குமார் ரூ.3.50 லட்சத்தை கடந்த 2009ல் கொடுத்தாராம்.