மதுரை அருகே சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்தவர் ராகினிமேரி(58). இவரது கிறிஸ்துவ சபையில் உறுப்பினராக இருப்பவர் விருதுநகர் அருகே பாவாலியைச் சேர்ந்த பாபுநாயுடு(60). இவருடன் இதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி, சங்கரப்பன்,பாண்டியராஜன், முத்துக்குமார் ஆகியோர் சேர்ந்து பாவாலி-சந்திரிகிரிபுரம் சாலையில் குறைந்த விலையில் நிலம் உள்ளதாகவும், அதில் கடன் பெற்று வீடு அமைத்து தருவதாகவும் கூறி அணுகியுள்ளனர். இதை உண்மையென நம்பிய ராகினிமேரி நேரில் கிராமத்திற்குச் சென்று இடத்தை பார்வையிடாமல், விருதுநகர் பேங்க் ஆர் பரோடாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மேலாளர் ராதாகிருஷ்ணன் உதவியுடன் கடன் ஆவண பத்திரங்களில் கையொப்பம் பெற்றுக் கொண்டனர்.