இதில், கல்வித் தகுதியின் அடிப்படையில் வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலையில்லா காலங்களில் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை அரசு வழங்க வேண்டும். சுயதொழில் தொடங்குவதற்கு அரசே நேரடியாக வட்டியில்லாத கடன் ரூ.5 லட்சமும், இடமும் அளிக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவு, தற்கொலை எண்ணங்கள் ஆகியவைகளை தடுக்க வழிவகை செய்வதற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் மனநல வல்லுநர்கள் மூலம் ஆலோசனை வழங்கவும், தூய்மையான ஊழலற்ற நிர்வாகத்தை அரசு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இச்சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.