விருதுநகர் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
விருதுநகர் அருகே பாண்டியன் நகரை அடுத்த ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன்(45). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் நாள்தோறும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு


விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையின் காரணமாக கூலி தொழிலாளி ஒருவர் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே பாண்டியன் நகரை அடுத்த ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன்(45). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் நாள்தோறும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்வாராம். அதேபோல், சனிக்கிழமை இரவும் அளவுக்கு அதிகமாக மதுக்குடித்து வந்தாராம்.
அப்போது, மனைவி பிரேமா இனிமேல் குடிக்க கூடாது எனக் கூறி திட்டினாராம். இதனால் மனவேதனை அடைந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை கொண்டாராம். இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...