விருதுநகரில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க சார்பில் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் முன்புறம், தேசபந்து மைதானம், மேற்குத் தெரு, டி.டி.கே சாலை, மேற்குத் தெரு, அல்லம்பட்டி, பாண்டியன் நகர், முத்துராமன்பட்டி உள்ளிட்ட 53 இடங்களில் 2 அடி முதல் 12 அடி வரையில் பல்வேறு ரகங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அதேபோல், சிவகாசி நகரம் மற்றும் ஒன்றிய பகுதியில் 59 சிலைகளும், அருப்புக்கோட்டையில் 35 சிலைகளும், ராஜபாளையத்தில் 42 சிலைகளும், சாத்தூரில் 44 சிலைகளும், திருச்சுழியில் 3 என மொத்தம் 277 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து வந்தனர். இதற்கு நாள்தோறும் குத்துவிளக்கு பூஜை மற்றும் மூன்று கால சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.