சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

சீன பட்டாசுகள் கடத்தி வருவதை தடுக்க பிரதமரிடம் முறையிட்டு முதல்வர் தீர்வு காண வேண்டும்: சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

சீன பட்டாசுகள் கள்ளத்தனமாக கடத்தி வருவதை தடுக்க பாரத பிரதமரிடம் தமிழக முதல்வர் முறையிட்டு தீர்வு காண வேண்டும் என விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:37 am

எஸ். பாண்டியன்

சீன பட்டாசுகள் கள்ளத்தனமாக கடத்தி வருவதை தடுக்க பாரத பிரதமரிடம் தமிழக முதல்வர் முறையிட்டு தீர்வு காண வேண்டும் என விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரி்க்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 840-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இத்தொழிலில் 3 லட்சம் பேர் நேரிடையாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் என மொத்தம் 5 லட்சம் பேரும், பட்டாசு ஆலை உரிமையாளர்களும் உள்ளனர்.

தற்போது, தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாள்களே உள்ளதால், பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து சீன பட்டாசுகளை கள்ளத்தனமாக கடத்தி வரப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால், வடமாநில வியாபாரிகள் இம்மாவட்டத்தில் தயாராகும் பட்டாசுகளை வாங்க வருவதில்லை. இதனால் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைமையேற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் பட்டாசு தொழிலை விட்டால் வேறு எந்த மாற்றுத் தொழிலும் தெரியாது. இந்த ஆலைகளை நம்பியே அச்சகம், கட்டிங், அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில் மற்றும் ஒட்டுதல், வியாபாரிகள் உள்ளிட்டோர் உள்ளனர். இது தொடர்பாக  தமிழக முதல்வர், பாரத பிரதமரிடம் முறையிட்டு சீன பட்டாசுகளை இந்தியாவிற்குள் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது, 500-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்களில் சீனா பட்டாசுகள் வந்து இறங்கியுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடையும் நிலையும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழ்நிலையிருக்கிறது. எனவே பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதியும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் சிறு பட்டாசு ஆலைகளின் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.