தற்போது, தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாள்களே உள்ளதால், பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து சீன பட்டாசுகளை கள்ளத்தனமாக கடத்தி வரப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால், வடமாநில வியாபாரிகள் இம்மாவட்டத்தில் தயாராகும் பட்டாசுகளை வாங்க வருவதில்லை. இதனால் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைமையேற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் பட்டாசு தொழிலை விட்டால் வேறு எந்த மாற்றுத் தொழிலும் தெரியாது. இந்த ஆலைகளை நம்பியே அச்சகம், கட்டிங், அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில் மற்றும் ஒட்டுதல், வியாபாரிகள் உள்ளிட்டோர் உள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வர், பாரத பிரதமரிடம் முறையிட்டு சீன பட்டாசுகளை இந்தியாவிற்குள் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.