விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், தற்போது 10-வது வார்டு ஆரிப் அலி(திமுக), 21-வது வார்டு உறுப்பினர் தங்கப்பாண்டியம்மாள்(அதிமுக), 34-வது வார்டு விவேக்ராஜன்(சுயே) ஆகியோர் காலமானார்கள். அதனால் கடந்த ஓராண்டுக்கும் மேல் உறுப்பினர் பதவி காலியாக இருந்து வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமலும் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதிலும் சிரமம் இருந்து வந்தது. இதையடுத்து, தற்போது உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.