சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஆற்றில் மணல் கடத்தியதாக 2பேர் கைது: லாரி பறிமுதல்

விருதுநகர் அருகே துளுக்கப்பட்டி கிராமத்தை அடுத்த அர்ச்சுனா ஆற்றுப்பகுதியில் மணல் கடத்திச் செல்வதாக வச்சக்காரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் துளுக்கப்பட்டி

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:37 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தியது தொடர்பாக 2 பேரை வச்சக்காரப்பட்டி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் அருகே துளுக்கப்பட்டி கிராமத்தை அடுத்த அர்ச்சுனா ஆற்றுப்பகுதியில் மணல் கடத்திச் செல்வதாக வச்சக்காரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் துளுக்கப்பட்டி-வேப்பிலைபட்டி சாலையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரி திடீரென போலீசாரை பார்த்ததும் திருப்பி தப்பி செல்ல முயற்சித்தனர்.

உடனே சுதாரித்துக் கொண்ட போலீஸார் விரைவாக சென்று சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த லாரியின் உரிமையாளர் ஜெகதீஸ்குமார்(32) என்பதும், லாரியின் ஓட்டுநர் சங்கர்கணேஷ்(28) என்ற விவரமும் தெரியவந்தது. இது குறித்து மேற்குறிப்பிட்ட 2 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். அதோடு, லாரியையும் பறிமுதல் செய்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.