சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகர் அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

விருதுநகர் அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தயார் செய்து காய வைத்திருந்த தீப்பெட்டிகள் எரிந்து நாசமானது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:34 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தயார் செய்து காய வைத்திருந்த தீப்பெட்டிகள் எரிந்து நாசமானது.

விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையைச் சேர்ந்தவர் பத்மநாபன்(45). இவர் விருதுநகர்-வடமலைக்குறிச்சி சாலை மீதுள்ள சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதற்கு முதல் நாள் தயாரித்து தீப்பெட்டிகளில் இருபுறமும் மருந்துகள் தடவி தயார் செய்து காய வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திடீரென தீப்பிடித்துள்ளது. அந்த தீ ஆலைக்குள் மளமளவென பரவியது. இதில் தயாரித்து வைத்திருந்த காலி தீப்பெட்டிகள் வைத்திருந்த குடோன் முழுவதும் எரிந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உரிமையாளருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்

மேலும் தீ பரவாமல் தடு்க்கும் வகையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தயாரித்து வைத்திருந்த காலி தீப்பெட்டிகள் மற்றும் மோட்டார் பைக் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.