சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

காரியாபட்டி அருகே கார் டயர் வெடித்த விபத்தில் தந்தை,மகன் சாவு

விருதுநகர் அருகே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார்  தடுப்புகளை தாண்டி மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் இரு பெண்கள் உள்பட

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:31 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார்  தடுப்புகளை தாண்டி மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் இரு பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த அமலதாஸ் என்பவரின் மகன் அருளானந்தம்(35). இவரது மகன் கேரின்(7), மனைவி அர்ச்சனா(30). இவர்களுடன் காரில் பந்தல்குடியில் உள்ள தங்கையின் புது வீடு வைபவ நிகழ்ச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார்களாம். அங்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலையில் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அதேபோல், ரமேஷ்கண்ணன்(45) மற்றும் அவரது மனைவி சுப்புரத்தினம்(37) ஆகியோர் காரில் காரியாபட்டியிலிருந்து-அருப்புக்கோட்டை நோக்கிச் சென்றனர்.   அப்போது, காரியாபட்டியை அடுத்த வக்கனாங்குண்டு அருகே 4 வழிச்சாலையில் வரும் போது திடீரென கார் டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார்  தடுப்புகளை தாண்டி எதிரே காரியாபட்டியிலிருந்து-அருப்புக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரமேஷ்கண்ணன் கார் மீது மோதியது. இதில், அருளானந்தம்(35), அவரது மகன் கேரின்(7) ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் அருளானந்தம் மனைவி அர்ச்சனா, மற்றொரு காரில் வந்த ரமேஷ்கண்ணன், அவரது மனைவி சுப்புரத்தினம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த காரியாபட்டி போலீஸார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காரியாபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.