விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செயல்படும் வட்டார வளமையங்களில் கணக்காளர் பணியிடங்கள் தாற்காலிகமாக நிரப்பப்பட இருக்கிறது. இப்பணிக்கு பி.காம் பட்டப்படிப்புடன், கணிப்பொறி(Tally) முடித்து தகுதிச் சான்று பெற்றிக்க வேண்டும். அதோடு, 1.8.2014 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட திட்ட அலுவலக வளாகத்தில் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பிரதி எடுத்து பூர்த்தி செய்து அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வரும் செப்-1ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாக அளிக்க வேண்டும்.