சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆடித் திருவிழா: 600 போலீஸார் பாதுகாப்பு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 600 பேர் ஈடுபடுத்தப்பட இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:29 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 600 பேர் ஈடுபடுத்தப்பட இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது:

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடிவெள்ளிக்கிழமை திருவிழாவும் தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றது ஆகும். இத்திருவிழா வியாழக்கிழமை இரவு தொடங்கி, சனிக்கிழமை வரையில் நடைபெற இருக்கிறது. இதன் உச்சக்கட்ட திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து டிராக்டர், மாட்டு வண்டிகள், லாரி மற்றும் வேன்  போன்ற வாகனங்களில் கூட்டம், கூட்டமாக வழிபாடு செய்து மாரியம்மனின் தரிசனம் பெறுவதற்காக வருவர். அதனால் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இத்திருக்கோயில் விழாவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் மற்றும் திருட்டுக்களை கட்டுப்படுத்தும் வகையில் 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 டி.எஸ்.பிக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் உள்ளனர். இதில், கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பெண்களிடம் நகை மற்றும் பணத்தை திருடுவதற்கு ஜேப்படி திருடர்கள் முயற்சி செய்வார்கள். இதை தடுக்கும் வகையில் பக்தர்கள் உடையில் ஆண், பெண் காவலர்கள் கண்காணிக்கவுள்ளனர்.

இந்தாண்டு முதல் திருக்கோயில் இருபுறமும் வெப்கேமரா பொறுத்தப்பட்டு கூட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் கணிப்பொறியின் மூலம் பார்வையிட்டு உடனே சம்பவங்கள் தடுக்கப்பட இருக்கிறது. அதேபோல், சாமி தரிசனம் செய்வதற்காக செல்லும் பக்தர்கள் அனைவரையும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த பிறகே அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவி்ததார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.