நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பெங்களூர்-நாகர்கோவில் விரைவு ரயில் ஜன.25-ம்தேதி வரை நீட்டிப்பு

பெங்களூர்-நாகர்கோவில் இடையே தர்மபுரி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கரூர் ரயில்நிலையத்திற்கு சனிக்கிழமை தோறும் இரவு

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:59 pm

ஏ. அருள்ராஜ்

நடப்பு மாதத்துடன்(நவம்பர்) நிறுத்தப்படுவதாக இருந்த பெங்களூர்-நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் வரும் ஜன.25-ம்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர்-நாகர்கோவில் இடையே தர்மபுரி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கரூர் ரயில்நிலையத்திற்கு சனிக்கிழமை தோறும் இரவு 8.06 மணிக்கு வந்துவிட்டு 8.10-க்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரயிலை வரும் 30ம்தேதியோடு நிறுத்தப்படும் என அண்மையில் தெற்கு ரயில்வே அறிவித்தது. இதையடுத்து இந்த ரயிலுக்கான முன்பதிவும் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த ரயிலை தினமும் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்தது. தினம்தோறும் இந்த ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டதும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வாராந்திர ரயிலை எப்போதும் போல வரும் ஜனவரி 25ம்தேதி வரை இயக்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.