ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் படுகொலை

மாலை 4 மணி அளவில் வேலூர் பேருந்து நிலையம் முன் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:44 am

எம். அருண்குமார்

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார்.

மாலை 3.15 மணி அளவில் வேலூர் பேருந்து நிலையம் அருகே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்துமண்டபம் பின்புறம் பாலாற்றங்கரையோரம் மர்ம நபர்கள் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் குவிந்த இந்து முன்னணியினர் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு சாலைமறியல் செய்தனர். 

பேருந்து நிலையத்தில் இருந்து காட்பாடி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களிடம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் வந்து விசாரணை நடத்தி சமாதானப் படுத்தினார். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.