பின்னர் இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கவிக்குமார் கூறுகையில், அரசால் தடைவிதிக்கப்பட்ட 120 பான்பராக் மூடைகள் இருந்தது. இதில், இரண்டு மூடைகளில் புகையிலை கலந்து நிகோடின் உள்ளது எனவும், மற்ற மூடைகளில் நிகோடின் என்ற இல்லாததது எனவும் மூட்டையின் மேல் ஒட்டப்பட்டிருந்த லேபிளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால், பான்பராக் மூடைகளின் மாதிரிகளை சேகரித்து பாளையங்கோட்டையில் உள்ள உணவு பகுப்பாய்வு மையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் மாதவன் மீது நடவடிக்கையும், பொருள்களை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முதல் கட்டமாக குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தம் 700 கிலோ மதிப்புடையை பான்பாரக் மூடைகளின் மதிப்பு சுமார் ரூ.9.60 லட்சம் வரையில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.