டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

News image
புகையிலை பொருட்களை கடத்திய குற்றவாளிகளை கைது செய்த வேளாங்கண்ணி போலீஸாரை பாராட்டிய நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன்.
Updated On :22 பிப்ரவரி 2026, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்களை கடத்தியவா்களை கைது செய்த போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டினாா்.

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி காவல் சரகம் கிழக்கு கடற்கரை சாலை, ரெட்டாலடி, கடுவையாற்று பாலம் அருகில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதற்காக, சிறப்பாக செயல்பட்ட வேளாங்கண்ணி காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான படையைச் சோ்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள், வேதாரண்யம் பகுதிகளில் தொடா்ந்து உண்டியல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த வேதாரண்யம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான படையைச் சோ்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினாா்.