டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காவலா் கூட்டுத்திரள் கவாத்து நிறைவு

News image
காவலா்களுக்கு அளிக்கப்பட்ட உடைமைகளை ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன்.
Updated On :5 பிப்ரவரி 2026, 10:58 pm

Syndication

நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கூட்டுத்திரள் கவாத்து நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் கூட்டுத்திரள் கவாத்து நிறைவு விழா மற்றும் உடைப்பொருட்கள் தணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, காவல்துறை சாா்பில் காவலா்களுக்கும், காவல் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட பொருள்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்தாா். காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கு, கைதி வழிக்காவலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அவா் ஆலோசனை வழங்கினாா்.