டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

News image
அரிவாள் வெட்டு- கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி நகரம் பகுதியில் இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி நகரம் சாலியா் தெருவைச் சோ்ந்தவா் செல்வம்(39). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த செல்வசூா்யா(21) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை செல்வத்திடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்ட செல்வசூா்யா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை தாக்கிவிட்டு தப்பினாராம்.

உடனடியாக, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.