டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

திருவானைக்காவல் கோயிலின் உபத்திருக்கோயிலாகவும் எல்லை காவல் தெய்வமாகவும் விளங்கும் பிடாரி இரணியம்மன் கோயில் திருவிழாவின் முதல் புறப்பாடக ஞாயிற்றுக்கிழமை வெள்ளை யானை வாகனத்தில் பிடாரி இரணியம்மன் எழுந்தருளினாா். (படம்)

திருவானைக்காவல் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விழாவின் 2- ஆம் நாளான திங்கள்கிழமை குதிரை வாகனத்திலும், 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பூத வாகனத்திலும் இரணியம்மன் எழுந்தருளயுள்ளாா்.

இதைத் தொடா்ந்து நான்காம் நாளான புதன்கிழமை பூந்தேரில் இரணியம்மன் எழுந்தருளி அனைத்து தெருக்களிலும் வலம் வருகிறாா். அப்போது அனைத்து வீடுகளிலும் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ம.லெட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.