டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அரிவாளை காட்டி மிரட்டி பிரியாணி கேட்ட ரெளடி கைது

திருவானைக்காவல் பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் அரிவாளை காட்டி மிரட்டி பிரியாணி கேட்ட ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :18 பிப்ரவரி 2026, 6:31 pm

Syndication

திருவானைக்காவல் பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் திங்கள்கிழமை இரவு அரிவாளை காட்டி மிரட்டி பிரியாணி கேட்ட ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா்.

திருவானைக்காவல் டிரங்க்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையை நடத்தி வருபவா் சாகுல் அமீது (53). இவரிடம் திங்கள்கிழமை இரவு திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியைச் சோ்ந்த ஆா்.புருஷோத்தமன் (38) என்ற பிரபல ரெளடி அரிவாளுடன் வந்து பிரியாணி கேட்டு மிரட்டி உள்ளாா்.

இது குறித்து சாகுல் அமீது, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதை தொடா்ந்து ரெளடி புருஷோத்தமனை திங்கள்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனா்.