டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

குமரி கடற்கரையில் அஸ்தி கரைக்க சிவசேனா தொண்டர்களுக்கு அனுமதி

முக்கடல் சங்கமிக்கும் குமரி கடலில் மறைந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின் அஸ்தியைக் கரைப்பதற்காக தொண்டர்கள் குமரியை நோக்கி வந்தனர். அவர்கள் வந்த வாகனங்களை மறித்த

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:43 pm

சி. சுரேஷ்குமார்

முக்கடல் சங்கமிக்கும் குமரி கடலில் மறைந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின் அஸ்தியைக் கரைப்பதற்காக தொண்டர்கள் குமரியை நோக்கி வந்தனர். அவர்கள் வந்த வாகனங்களை மறித்த போலீஸார் அவர்களை கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் விட மறுத்தனர்.

பின்னர் சுமார் 3 மணி நேரப் போராட்டம், பேச்சுவார்த்தை ஆகியவைகளைத் தொடந்து, ஐந்து, ஐந்து வாகனங்களாக கன்னியாகுமரிக்குள் செல்ல அனுமதித்தனர்.

100 வாகனங்களுக்கு மேல் வந்ததால் இந்த அனுமதி மறுகப்பட்டதாக போலீஸார் முதலில் கூறினர்.

பின்னர் இதுகுறித்து மாவட்ட எஸ்பி.சதீஷ்குமாரிடம் கேட்டபோது,

கன்யாகுமரி மாவட்டத்தில் வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத் துறை கொடுத்த தகவலால், சிவசேனைத் தொண்டர்களை மாவட்டத்துள் அனுமதிப்பதில் தயக்கம் காட்டினோம். பின்னர் அவர்களைப் பிரித்து தனித்தனியாக அனுப்பி வைத்தோம். 

போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுத்தோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.