குமரி கடற்கரையில் அஸ்தி கரைக்க சிவசேனா தொண்டர்களுக்கு அனுமதி
முக்கடல் சங்கமிக்கும் குமரி கடலில் மறைந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின் அஸ்தியைக் கரைப்பதற்காக தொண்டர்கள் குமரியை நோக்கி வந்தனர். அவர்கள் வந்த வாகனங்களை மறித்த


முக்கடல் சங்கமிக்கும் குமரி கடலில் மறைந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவின் அஸ்தியைக் கரைப்பதற்காக தொண்டர்கள் குமரியை நோக்கி வந்தனர். அவர்கள் வந்த வாகனங்களை மறித்த போலீஸார் அவர்களை கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் விட மறுத்தனர்.
பின்னர் சுமார் 3 மணி நேரப் போராட்டம், பேச்சுவார்த்தை ஆகியவைகளைத் தொடந்து, ஐந்து, ஐந்து வாகனங்களாக கன்னியாகுமரிக்குள் செல்ல அனுமதித்தனர்.
100 வாகனங்களுக்கு மேல் வந்ததால் இந்த அனுமதி மறுகப்பட்டதாக போலீஸார் முதலில் கூறினர்.
பின்னர் இதுகுறித்து மாவட்ட எஸ்பி.சதீஷ்குமாரிடம் கேட்டபோது,
கன்யாகுமரி மாவட்டத்தில் வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத் துறை கொடுத்த தகவலால், சிவசேனைத் தொண்டர்களை மாவட்டத்துள் அனுமதிப்பதில் தயக்கம் காட்டினோம். பின்னர் அவர்களைப் பிரித்து தனித்தனியாக அனுப்பி வைத்தோம்.
போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுத்தோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...