/

சீருடைப் பணியாளர் எழுத்துத் தேர்வு: 7 மையங்களில் 13 ஆயிரம் பேர் எழுதினர்

சேலம், ஜூன் 24: சேலத்தில் இன்று நடைபெற்ற சீருடைப் பணியாளர் எழுத்துத் தேர்வில் 13 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு-மீட்புப் ப

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:51 pm

க. தங்கராஜா

சேலம், ஜூன் 24: சேலத்தில் இன்று நடைபெற்ற சீருடைப் பணியாளர் எழுத்துத் தேர்வில் 13 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு-மீட்புப் பணி வீரர், சிறைக் காவலர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

 சேலத்தில் வைஸ்யா கல்லூரி, ஏ.வி.எஸ். கல்லூரி, சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, ஜெய்ராஜ், கணேஷ் கலை, அறிவியல் கல்லூரி, சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி, செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன.

 இந்தத் தேர்வு 80 நிமிடங்கள் நடைபெற்றன. 80 வினாக்களுக்கு தேர்வர்கள் பதில் அளித்தனர். இந்தத் தேர்வுகளை எழுத 12,358 ஆண்கள், 1,381 பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மட்டும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்கு 20 நபர்களுக்கு ஒரு காவலர் என்ற வீதத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.