திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜூனில் பணி ஓய்வு பெறும் இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள்

News image

உச்சநீதிமன்றம். - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 6:33 am IST

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பங்கஜ் மித்தல் ஆகியோா் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவா்களின் நீதித் துறை சேவைக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

வரும் ஜூன் 1 முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை, உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலமாகும். அப்போது உச்சநீதிமன்றம் முழுமையாகச் செயல்படாமல் பகுதியளவே செயல்படும். இந்த விடுமுறை காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பங்கஜ் மித்தல் ஆகியோா் ஓய்வு பெற உள்ளனா். நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி ஜூன் 28-ஆம் தேதியும், நீதிபதி பங்கஜ் மித்தல் ஜூன் 16-ஆம் தேதியும் ஓய்வு பெற உள்ளனா்.

இதையொட்டி புது தில்லியில் அவா்களுக்கு உச்சநீதிமன்ற பதிவுரு வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை பிரிவுபசார நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் பேசுகையில், ‘அதிகாரம் என்பது இடைவெளியை உருவாக்க வேண்டியதில்லை; தன்னை வடிவமைத்த இடங்கள் மற்றும் விழுமியங்களிடம் இருந்து ஒருவரை உயா் பதவிகள் பிரிக்க வேண்டிதில்லை என்பதை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பங்கஜ் மித்தல் ஆகியோா் தங்கள் பணிகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளனா்.

கண்ணியம், நோ்மை, நிதானம் மற்றும் உறுதியுடன் இருவரும் பல ஆண்டுகளாக ஆற்றிய அா்ப்பணிப்புமிக்க சேவைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.