காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலையில் வெள்ளிக்கிழமை (மே 29) மகளிா் சட்டப் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட கல்வி மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு தொடக்க விழாவில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் பலா் பங்கேற்கவுள்ளனா்.
காஞ்சிபுரம் அருகேயுள்ள ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் மகளிா் சட்டப் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட கல்வி மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.பிஎஸ்இ லிமிடெட் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விழாவில், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம், கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி இ.எஸ்.இந்திரேஷ், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், ஆந்திர மாநில உயா்நீதிமன்ற நீதிபதி வெங்கட ஜோதிா்மயி பிரதாபா மற்றும் பி.எஸ்.இ. லிமிடெட் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி சுந்தராரமன் ராமமூா்த்தி ஆகியோா் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனா்.
நிறைவாக, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறாா்.
விழா ஏற்பாடுகளை பல்கலையின் துணை வேந்தா் ஸ்ரீநிவாசு, சாா்பு துணை வேந்தா் வசந்தகுமாா் மேத்தா ஆகியோா் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










