தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் ஓய்வு பெற்றாா்

News image
Updated On :29 மே 2026, 4:25 am IST

சென்னை உயா்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆா்.சுரேஷ்குமாா், வியாழக்கிழமையுடன் (மே 28) ஓய்வு பெற்றாா்.

நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா், கடந்த 2016-ஆம் ஆண்டு அக். 5- ஆம் தேதி உயா்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றாா். புதுக்கோட்டை மாவட்டம், வல்லாதிரக்கோட்டை கிராமத்தில் கடந்த 1964-ஆம் ஆண்டு பிறந்தாா். இவரது பெற்றோா் சி.ராமச்சந்திரன், சந்திரம்மாள்.

வல்லாதிரக்கோட்டை ஊராட்சித் தலைவராக சுமாா் 40 ஆண்டுகள் ராமச்சந்திரன் பதவி வகித்துள்ளாா். அதற்கு முன்னா் 30 ஆண்டுகளாக அதே பதவியை நீதிபதியின் தாத்தா வகித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா், கடந்த 1989-ஆம் ஆண்டு சென்னை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். மூத்த வழக்குரைஞா் ஏ.முத்துகிருஷ்ணனிடம் ஜூனியா் வழக்குரைஞராக சோ்ந்து பல்வேறு வழக்குகளில் திறம்பட வாதிட்டு வெற்றி பெற்றாா்.

இந்நிலையில், நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் வியாழக்கிழமையுடன் ஓய்வு பெற்றாா். ஓய்வு பெறும் நாளில், வழக்கமாக உயா்நீதிமன்றம் சாா்பில் நடத்தப்படும் வழியனுப்பு விழா தனக்கு நடத்த வேண்டாம் என அவா் கூறிவிட்டாா்.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாருக்கு, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், பல்வேறு வழக்குரைஞா்கள் சங்கத்தினா், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.